அருட்ப்ரகாச வள்ளலார் அறைக்குள் சென்று
அப்படியே மறைந்துவிட்டார்
மாணிக்கவாசக சுவாமிகள் கோயில்
கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டார்
ஆண்டாள் அரங்கனுடன் மக்கள் கண்ணெதிரே
அரங்கனுடன் கலந்து மறைந்துவிட்டாள்.
இந்த செய்திகளை பக்தர்கள் காலம் காலமாக
கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அது எப்படி நடந்தது என்று
தீவிரமாக ஆராய்ச்சி செய்யவில்லை.
அவர்களால் முடியும்போது நம்மால் மட்டும்
ஏன் முடியாது என்று சிந்திப்பதில்லை
இதில் ஒரு வியக்கத்தக்க உண்மை
என்னவென்றால் ஒவ்வொருவரும் அவர்கள்
அறியாமலே அந்த நிலையை தினமும்
அடைந்துகொண்டிருக்கின்றனர்
எப்படி?
தினமும் தற்காலிகமாக உறக்கத்தில் ஆழும்போது
தங்கள் உடலை,மனதை, இந்த உலகத்தை
உணர்ச்சிகளை, எண்ணங்களை மறந்து
மறைந்து போகின்றனர்.
உறக்கத்திலிருந்து விழிக்கும்போது
அனைத்தும் காட்சிக்கு,நினைவுக்கு
வந்துவிடுகின்றன
இது எப்படி ?
உறக்கத்தில் மட்டும் ஏன் அனைத்தும்
மறைந்து போகின்றன?
எங்கு மறைந்துபோகின்றன?
பிறகு எங்கிருந்து அனைத்தும் வருகின்றன?
அதை தினமும் , நாம் உணராமல்
செய்து கொண்டிருக்கிறோம்
மேலே குறிப்பிட்ட அருளாளர்கள் அதை
உணர்ந்து செய்துள்ளார்கள்
தற்காலிகமாக நாம் உறக்கத்தில் அடையும்
எண்ணங்களில்லா தன்மையை விழித்திருக்கும்
நிலையிலும் அடைவதற்குதொடர்ந்து முயற்சி செய்தால்
நாமும் அருளாளர்கள் அடைந்த நிலையை
நிச்சயமாக அடைய முடியும்
No comments:
Post a Comment