Total Pageviews

Monday, November 10, 2008

இறைவனுக்கு தன்னை காத்து கொள்ள தெரியும்.

நம்மை படைத்து காக்கும் இறைவனிடம்
தன்னை காக்க வேண்டும்
என்று தினமும் வழிபாடு செய்பவர்களே
நீங்கள் அவன் உறையும் கோயில்களை
காப்பாற்ற அடிதடிகளில் ஈடுபடுவது ஏனோ ?
நம்மை உறங்கும்போது கூட
கண்விழித்து காப்பாற்றும் இறைவனுக்கு
தான் உறையும் கோயில்களை
காப்பாற்றிக்கொள்ள தெரியாதா ?
என்ற நம்பிக்கை உங்களுக்கு
ஏன் ஏற்படவில்லை?
நம்பிக்கையற்ற வழிபாட்டால்
பயனேதும் இல்லை
நம்பிக்கை கொள்வீர்
நலமாக வாழ்வீர் .

No comments: