Total Pageviews

Monday, November 10, 2008

பெரியார் சிலை வைத்தால் ஏன் பதறுகிறீர்கள்?

பெரியார் சிலை வைத்தால் ஏன் பதறுகிறீர்கள் ?;
சிலைகளால் என்ன செய்ய முடியும்
நீர் கொண்ட கொள்கைகளில்
உறுதியாக இருந்தால்
எனவே சிந்திப்பீர்
அழிவு செயல்களில் ஈடுபடும்
எண்ணங்களை விட்டோழிப்பீர்

பெரியார் சிலைகளாகட்டும்
பெருமாள் சிலைகளாகட்டும்
அவைகள் ஒன்றும் செய்வதில்லை
அவைகளை வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன
அதை வைப்பவர்கள்தான்
அடித்துகொள்கிறார்கள்
அவரவர் கொள்கைகளை
நிலை நாட்டும் பொருட்டு

சிலைகள் சிலையாய் இருக்கும்போது
தோன்றாத பிரச்சினைகள்
அதை உடைக்கும்போது மட்டும்
தோன்றுவது ஏனோ ?
அச்செயல் அதை வைத்தவர்களின்
உணர்வுகளை பாதிப்பதினால்தான்

No comments: